Translate

சனி, 21 ஏப்ரல், 2018


வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க!


>

ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்சாகம் பொங்க எழுதி வருகிறேன்.இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பலரும் கேட்கும் கேள்வி தமிழில் இதே போல இ புக் வடிவில் புத்தகங்களை வாசிக்க உதவும் தளங்கள் எவை என்பது தான்?

ஆர்வத்தோடு கேட்கப்படும் இந்த கேள்விக்கு உற்சாகமாக சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு இணையதளம் அறிமுகமாகியுள்ளது.இந்த தளத்தை சுட்டிக்காட்டிய சிலிக்கான ஷெல்ப் தளத்திற்கு நன்றி.(தமிழில் புத்தகங்கள் தொடர்பான அருமையான வலைப்பதிவு இது)

ஓபன் ரீடிங் புக் என்னும் அந்த இணையதளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.

முகப்பு பக்கத்தில் வலைபதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத்துவங்கி விடலாம்.

அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன.அரசியல்,இலக்கியம்,உடல் நலம்,இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.

அ.சிதம்பர செட்டியாரில் துவங்கி ,அ.ச.ஞா,, அண்ணாதுரை, அவ்வை தி.க. சண்முகம், ஆ. கார்மேகக் கோனார், என்.வி. கலைமணி, எஸ்.எஸ். தென்னரசு,ஔவை துரைசாமிப் பிள்ளை,க.நா.சு, கல்கி என எழுத்தாலர்களின் பட்டியலும் நீள்கிற‌து.

நாட்டுப்புற இலக்கியம்,நாவல்கள்,பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.
சமீபத்தில் துவக்கப்பட்ட இந்த தளம் செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த தளத்தை நடத்தி வரும் சிங்கபூரை சேர்ந்த தமிழ் ஆர்வலரும் பத்திரைகையாளருமான ரமேஷ் சக்ரபாணி பாராட்டுக்கிறியவர்.

இலவச இணைய நூலகமாக இதனை அவர் குறிப்பிடுகிறார்.

இணையதள முகவரி;http://www.openreadingroom.com/

செவ்வாய், 29 ஜூலை, 2014

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு


நண்பர்களுக்கு வணக்க்ம் நான் கடந்த காலங்கள் புதிய பதிவு எழுத்த நேரம் இலாத காரணத்தால் என்னால் பதிவு இடமுடிய வில்லைமன்னிக்கவும்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை தென்னக ரயில்வேயின் சென்னை-கன்னியாகுமரி தடத்தில் சென்னையிலிருந்து 496 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. தொழில், சுற்றுலா, கல்வி, கலாச்சாரம் என்று தமிழின் அனைத்துத் துறைகளிலும் கால்பதித்து வெற்றி கண்டிருக்கும் இந்த மதுரை, சுற்றுலா செல்வோருக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.
மதுரை மண்ணை மணக்கச் செய்யும் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆரம்பித்து, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, அழகர்கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வைகை அணை என்று நகரைச் சுற்றிலும் இயற்கை வளம், ஆன்மீகம் கொழிக்கும். அதனை விடுத்து மதுரையிலிருந்து கொடைக்கானல், பழநி, இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மற்ற சிறப்புகள் வாய்ந்த இடங்களுக்கும் போக்குவரத்து வசதிகள் மிகுந்துள்ளது. 24 மணிநேர போக்குவரத்து வசதிகள் இங்கு உண்டு. தென்னக ரயில்வேயில் மதுரை ஒரு மிகமுக்கிய சந்திப்பாகும். ரயில்வே பயண நேரத்திற்கு
என்ற தளத்தை நாடவும்.
பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது.
இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)



மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும். 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவிலும் பூரிக்கப்படுகின்றன.



மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர்.
மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.
மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.

600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போட்டது நினைவிருக்கலாம்.
ஒரு நகரம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், அதன் கட்டமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் வீதி அமைப்புகள் எவ்வாறு உருவாகப்பட வேண்டும் என்பதை மதுரையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கர்ம வீரர் காமராஜர்கூறி உள்ளார். அது மீனாட்சி அம்மன் கோவிலையும் அதைச்சுற்றி உள்ள வீதிகளையும் கருத்தில் கொண்டே.நன்றி மீண்டும் சந்திப்போம்.....

திங்கள், 5 நவம்பர், 2012

மாதம் மாதம் இலவச RECHARGE செய்ய வேண்டுமா ?

மாதம் மாதம் இலவச RECHARGE செய்ய வேண்டுமா ?
கடந்த மாதம் இணையத்தில் சம்பாதிப்பது எப்படி என ஒரு பதிவிட்டேன் . அதன் தொடர்சியாக , அதில் சொன்ன ஒரு தளத்தில் நாம் எப்படி எளிதாக மாதம் மாதம் இலவசமாக RECHARGE செய்துகொள்ளலாம் என பார்ப்போம் . இணையதள முகவரி;http://sms.ultoo.com/login.php?refererCode=1564217E&flag=hide இதில் இணைந்து விட்டால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம் . நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMS க்கும் உங்கள் கணக்கில் இரண்டு பைசா ஏறும். உதாரணமாக உங்கள் நண்பர்கள் 100 பேரின் எண்களை இதில் பதிய வைத்து கொள்ளுங்கள் . (Contact List Option உண்டு ) தினமும் நீங்கள் இணையம் பயன் படுத்தும் போது காலை மாலை இரவு என தினமும் நான்கு முறை அனைவருக்கும் Group SMS அனுப்புங்கள் . அப்படி அனுப்பினால் 400 x 0.02 = 8 rs உங்கள் கணக்கில் ஏறும . தினமும் 8 எனில் மாதம் 240 ருபாய் உங்கள் கணக்கில் ஏறும . குறைந்தது 100 ருபாய் ஏறினால் கூட அதை உங்கள் RECHARGE செலவில் குறைத்து கொள்ளலாம் அல்லவா ? இதில் உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலம் உங்கள் கணக்கில் இன்னும் பணத்தை அதிகரிக்கலாம் . டிஸ்கி : இதுப்போல எளிமையாக பணம் சம்பாதிக்க உள்ள தளங்களை விரைவில் பார்ப்போம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் அம்மையும், அப்பனும் கலந்த ஒரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும். சிவதலமும், திருமால் தலமும் ஒன்றாய் அமைந்து விளங்கும் இத்திருத்தலமானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்புகளாலும் பெருமையுடையது இத்தலம். இங்கு தான் இறைவன் ஆண்பாதி பெண்பாதி என்கின்ற தோற்றத்துடன் உமையொருபாகனாக, மாதிருக்கும் பாதியனாக, மங்கை பங்கனாக அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருள் தருகிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல் மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது இத்தலம். சுமார் 1370 ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருதலமானது மரம், செடி, கொடிகளை உடையதாகவும், பல மாட மாளிகைகள் நிறைந்ததாகவும், இங்குள்ள குன்றானது (மலை) இயல்பாகவே செம்மை நிறமாகவும் இருந்ததால் இத்தலத்தை கொடிமாடச் செங்குன்றூர் எனவும் மற்றும் ரிசிகள், தேவர்கள், முனிவர்கள் இருப்பிடமாக இருந்ததால் 'திரு' என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்றும் புகழப்பட்டது. சுமார் 350 ஏக்கர் நிலபரப்பில் கடல் மட்டத்திற்கு மேல் 2000 அடிகளை உடைய இத்திருமலை கோவிலானது கோவில் அடிவாரத்திலிருந்து 650 அடி உயரத்தில் 1206 படிகளை உடையது. செம்மலை, மேருமலை, சிவமலை, நாகாசலம், பனிமலை, கோதைமலை, அரவகிரி, பிரம்மகிரி, வாயுமலை, கொங்குமலை, நாககிரி, வந்திமலை, சித்தர்மலை, சோணகிரி, தந்தகிரி முதலான பல சிறப்புப் பெயர்களையும் உடையதாக இத்தெய்வத் திருமலை அழைக்கப்படுகிறது. இத்தலம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத்தலமாகும் சதயநட்சத்திரத்தின் அதிபதி சனியும், ராகுவும் ஆவர். இம்மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரரைத் தொழுதலே சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரமாகும். புராண வரலாறு முன்னொரு காலத்தில் ஆதிசேடனுடன் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என்பதை அறிய இருவரும் போர் செய்தனர். இப்போரினால் உலகில் பேரழிவுகளும், துன்பங்களும் நேரிடுவதை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர். இதன்படி ஆதிசேடன் தன்படங்களால் மேருவின் சிகரத்தின் முடியை அழுத்தி கொள்ளவேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்றும் கூறினர். ஆனால் வாயுதேவன் பிடியை தளர்த்த முடியவில்லை இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிசேடனின் பிடியை தளர்த்த வேண்டினர். ஆதிசேடம் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிசேடன் சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறுண்டு விழுந்தது. அவற்றில் ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடாகவும்) காட்சியளிக்கிறது. மூலவர் - அர்த்தநாரீஸ்வரர் அம்மன் - பாகம்பிரியாள் தல விருட்சம் - இலுப்பை தீர்த்தம் - தேவதீர்த்தம் பழமை - 1000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் - திருக்கொடிமாடச் செங்குன்றூர் ஊர் - திருச்செங்கோடு மாவட்டம் - நாமக்கல் மாநிலம் - தமிழ்நாடு பாடியவர் - திருஞானசம்பந்தர் -திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 4வது தலம். திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம்,பங்குனி உத்திரம். பிரார்த்தனை: கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம்,இராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். நேர்த்திக்கடன்: வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,திருச்செங்கோடு, கொடிமாடச் செங்குன்றூர்,நாமக்கல் மாவட்டம். +91-4288-255 925, 93642 29181 (மாற்றங்களுக்குட்பட்டவை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

சனி, 6 அக்டோபர், 2012

தமிழில் Diplomo, Degree போன்றவைகளை இணையத்திலேயே


1. இன்று இணையத்தில் உலவி கொண்டிருக்கும் பொழுது கண்ணில் பட்டது இந்த இணையதளம். Tamilvu.org என்ற இணையதளம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த தளத்தின் முக்கிய பயன் என்னவென்றால் இணையத்திலேயே தமிழ் மொழியை கற்கலாம். மற்றும் அதற்க்கான சான்றிதழும் வழங்குகிறார்கள். தமிழில் Diplomo, Degree போன்றவைகளை இணையத்திலேயே கற்க முடியும். தேவையானவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். இதில் உள்ள இன்னொரு வசதி மழலைக் கல்வி சிறு குழந்தைகளுக்கு பாடங்கள், பாடல்கள், சிறுகதைகள், எழுத்து பயிற்சி போன்ற அனைத்தையும் எளிதாக புரியும் படி அனிமேஷன் வடிவில் அமைத்து இருக்கிறார்கள். சேர்க்கைத் தகுதி
பட்டய, மேற்பட்டயப் பாடங்களை ஒருங்கிணைத்துப் பட்டப் படிப்பின் பாடத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பட்டய, மேற்பட்டய, பட்ட வகுப்புகளில் முறையே சேர விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி நிலை : பாடத் திட்டம் தகுதி நிலை (தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்) பட்டயம் / மேற்பட்டயம் / பட்டம் 10+2 (அல்லது) த.இ.க. மேற்சான்றிதழ் நிலை 3 (அல்லது) அதற்கு ஈடான கல்வி நிலையில் தேர்ச்சி இப்பட்டப் படிப்பில் சேர வயது வரம்பு இல்லை. 2. பாடத் திட்டத்தின் கால அளவும் பிரிவுகளும் இளநிலைத் தமிழியல் பட்டக்கல்வி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. பகுதி-1 தமிழ் மொழிப் பாடங்கள். பகுதி-2 தமிழ் அல்லது ஆங்கிலம் (மொழிப் பாடங்கள்). பகுதி-3 தமிழியல் தொடர்பான பாடங்கள். (தமிழ் மொழியும், இலக்கியமும்) மேற்குறிப்பிட்ட இந்த 3 பகுதிகளுக்கான பாடங்களும் 3 ஆண்டுகளில் பயிலுவதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளில் விலக்கு ஏற்கப்பட்ட உள்நாட்டு/வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் இளங்கலைப் பட்டம் பெற்றவர்க்கும், மற்றும் இளங்கலைப் பட்டப் பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றில் தேர்ச்சித் தகுதி பெற்றவர்களுக்கும், த.இ.க.-வின் இளநிலைத் தமிழியல் பட்டக் கல்விக்கான பகுதி-1, பகுதி-2 இவற்றிற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வியில் சேரும் மாணவர்கள் பதிவு செய்த நாளில் இருந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே பட்டம் பெறத் தகுதி பெறுவர். பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றில் விலக்குப் பெற்ற மாணவர்கள், மற்ற 16 தாள்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்னர் பட்டம் பெறுவர்.

வியாழன், 20 செப்டம்பர், 2012

இசை இசை சார்ந்த தளம்


 யூவால்.டிவி தளத்தை இன்னொரு இசை கண்டுபிடிப்பு தளமாக கருத வேண்டியிருந்தாலும் இன்னொரு இசை சார்ந்த தளம் என்னும் அலுப்பை மீறி இசைப்பிரியர்களை முதல் பார்வையிலேயே கவர்ந்திழுக்க கூடிய இணையதளமாகவே இது இருக்கிறது.
முதல் பார்வையிலேயே என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.காரணம் இசைமயமான இந்த தளம் காட்சிமயமாக அமைந்திருப்பது தான்.அதாவது இசை தேவையை இந்த தளம் காட்சிரீதியாக நிறைவேற்றி தருகிறது.
பாடல்கள்,பாடக‌ர்கள்,இசை வகைகள் என எல்லாமே வரிசையாக பட்டியலிப்பட்டிருக்கும் முறை அலுப்பு தரக்கூடியது என கருதுபவர்கள் இதன் முகப்பு பக்கத்தில் நுழைந்ததுமே சொக்கிப்போய் விடுவார்கள்.அதற்கு காரணம் இந்த தளமே இசை சுவராக வண்ணமயமாக வரவேற்பது தான்.!.
ஆம் தளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் பாடகர்கள் ,இசை கலைஞர்களின் புகைப்படங்களாக நிறைந்திருக்கின்றது.எந்த படத்தை கிளிக் செய்தாலும் அந்த பாடகரின் பாடல்களுக்கான இணைய ஜன்னல் எட்டிப்பார்க்கிறது.பாடகரின் பாடலும் வீடியோ காட்சியோடு கேட்கத்துவங்கிறது.அந்த பாடகர் பிடித்தமானவர் என்றால் தொடர்ந்து அதே ஜன்னலில் அவரது பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம்.
இல்லை என்றால் வேறு பாடகரின் பாடலை கேட்க சென்று விடலாம்.பாடகரை தேர்வு செய்வது மிகவும் சுலபம்.இசை சுவற்றில் பாடகரின் படத்தை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும்.
இந்த சுவர் பாடகர்களால் உருவாக்கியிருந்தாலும் இதில் நீங்கள் விரும்பிய பாடகர்கள் இல்லாமல் போகலாம்!அப்போதும் கவலைப்படவேண்டாம் உங்கள் மனதில் உள்ள பாடகரின் பெயரை டைப் செய்து தேடினால் அவருக்கான இசை ஜன்னல் வந்து நிற்கிறது.
முகப்பு பக்கத்தில் பெரும்பாலும் மேற்கத்திய பாடகர்களே ஆதிக்கம் செலுத்தினாலும் தேடல் பகுதியில் நமது இசைஞானியில் துவங்கி சித்ரா,யுவன்,ஹாரீஸ்,ரஹ்மான் என எல்லோரையும் கண்டுபிடிக்க முடிகிறது.பாடல் பட்டியல் முழுமையாக இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஏதுமில்லாத ஏமாற்றம் ஏற்படுவதில்லை.
அது மட்டும் அல்ல,ஒரு பாடகர் அல்லது இசையமைப்பாளரை தேடும் போது அவருடன் தொட‌ர்புடைய மற்றவர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு ரஹ்மானை தேடும் போது யுவன் ,ஹாரீஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
பாடகர்களை கொண்டு தேடுவது மட்டும் அல்ல ஒவ்வொருவரின் மனநிலையை குறிப்பிட்டும் தேடும் வசதி இருப்பது கவரக்கூடியது.காதல் மனநிலைக்கேற்ற பாடல்கள்,உற்சாக மனநிலைக்கேற்ற பாடல்கள்,சோகமாக மூடுக்கேற்ற பாடல்கள் என்றும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இதைத்தவிர வழக்கமான இசை வகைகளுக்கேற்ற படி தேடிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
பேஸ்புக் மூலம் பதிவு செய்து கொண்டால் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் கூடுதல் வசதியும் இருக்கிறது.
தோற்றம் உள்ளடக்கம் என்று இரண்டிலுமே கவர்ந்திழுக்கும் இசைமயமான இணையதளம் இது.இல்லை வண்ணமயமான இசை சுவர் இது.இதில் சாய்ந்தபடி இசை இளைப்பாறலாம்.இனிமையான உலகில் சஞ்சரிக்கலாம்.
இணையதள முகவரி;http://www.uwall.tv/